சிறு வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு, இன்று சிறைச்சாலையில் உயிரிழப்பு
களுத்துறை, அகலவத்தை பகுதியில் சிறு வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்
குறித்த பிக்கு தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் உடல் நலக் குறைவினால் இன்று -13- காலை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கேட்கவே கூச்சம் இருக்கு...
ReplyDelete