Header Ads



விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு, நவ சிங்கள ராவய வலியுறுத்து


புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-


அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.


அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுகின்றார். புலிகளின் பிரிவினைவாத முகாமையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரின் அறிவிப்புக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றார்.

4 comments:

  1. பாராளுமன்ற விழுமியங்கள், சம்பிரதாயங்கள் பற்றிய எந்த அறிவும் தௌிவும் இல்லாத இனத்துவேசத்தை மாத்திரம் தாரகமந்திரமாகக்க கொண்ட சிங்கள ராவய கட்சியை உடனடியாகத் தடைசெய்து அதன் உறுப்பினர்கள், துவேச வெறியன்களை உடனடியாக சிறையில் அடைத்து நூறுவருடங்க்ள சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இ்ந்த நாட்டில் கலாசார பொருளதார முன்னே்றத்தை எடுத்து்ச செல்ல முடியாது.

    ReplyDelete
  2. உண்மையைச் சொல்லப்போனால் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு முன்னால் நின்று பேசுவதற்கே qualified இல்லாதவரகளே நாங்கள். என்ன செய்வது. காலத்தை அப்படிக் கெட வைத்துவிட்டார்கள். . அது அவரவர் கருத்து என்று. கௌரவ சபாநாயகர் ஐயா அவரகளே கூறிவிட்டார்கள். இதற்கு மேலுமா இப்பேச்சு பற்றிய விவாதம்!

    ReplyDelete
  3. அவரைப் பேசத்தூண்டிய இவர் போன்றோரை முதலில் கைது செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. Absolutely right you are, Professional Translation Services.

    ReplyDelete

Powered by Blogger.