மாணவர்களுக்கு தினமும், முட்டை வழங்க நடவடிக்கை
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம் படுத்தத் தினமும் முட்டைகளை வழங்குவதில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்து பார்க்கக் கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் மற்றும் முட்டை விநியோகஸ்தர் களின் சங்கத்தினர் ஆகியோருடன் இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
விஜேராமாவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
Post a Comment