Header Ads



மாடுகளை அறுப்பதை தடைசெய்வது ஒத்திவைப்பு - பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்


இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதிதீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் மகிந்தராஜபக்ச நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் தனது கருத்தினை முன்வைத்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

மாடுகளை இறைச்சிக்கா கொல்வதை தடை செய்யப்போவதாக பிரதமர் தெரிவித்திருந்தார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை எப்போது சமர்ப்பிப்பது என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


6 comments:

  1. ஒரு சாதாரண மனிதன் மற்றவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கவே மாட்டான். ஒரு மக்கள் தலைவனோ அப்படியான எந்த எண்ணமே தனக்கு வரக்கூடாது என்று காலையில் துயில் எழுமபோது கடவுளைப் பிரார்த்திப்பான். ஆனால் நவீன தலைவனோ தனது எதிராளிக்கு மட்டும் எப்போதும் கேடுதான் வரவேணடும் என்று சதா எண்ணம் உள்ளவனாகவே இருப்பான்.
    සාමාන්‍ය මිනිසෙකු තමා වෙනත් කෙනෙකුට හානියක් කළ යුතු යැයි කිසි විටෙකත් නොසිතනු ඇත. ජනතාවගේ නායකයෙක් උදේ අවදි වූ විට දෙවියන් වහන්සේට යාච් pray ා කළේ එවැනි සිතුවිල්ලක් තමා වෙත නොපැමිණෙන ලෙසයි. එහෙත් නූතන නායකයා සැමවිටම සිතන්නේ ඔහුගේ විරුද්ධවාදියාට පමණක් සෑම විටම හානියක් කළ යුතු බවයි.

    ReplyDelete
  2. சர்வதேச வியாபர ஒழுங்குகளையும் ஏகபோக விற்பனை உரிமையையும் பெற்றுக் கொள்ள சுமார் ஒரு மாதம் தேவையாகும்.

    ReplyDelete
  3. Please go ahead with the proposal. Muslim community in Sri Lanka will support for it. We know very well that man made law will never work against the nature and the food cycle.

    ReplyDelete
  4. மாடறுப்பு தடை
    மாட்டிறச்சி இறக்குமதி..
    புலிகளும்
    சிங்கங்களும்
    வாருங்கள் வரிசையில்
    இறச்சிக்கான
    றேசன்காட்
    இனி
    உங்களுக்கும்
    வளங்கப்படும்

    ReplyDelete

Powered by Blogger.