Header Ads



ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும், ஷங்ரிலா ஹோட்டலின் பிரதான உணவக பகுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொழும்பில் உள்ள முக்கிய விருந்தகங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியிருந்தன.


இந்நிலையில் அவற்றில் அதிகளவான பாதிப்புக்கு இலக்காகியிருந்த ஷங்ரிலா விருந்தகத்தின் பிரதான உணவக பகுதி நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் மீண்டும் குறித்த ஷங்ரிலா விருந்தகம் திறக்கப்பட்ட போதிலும், குண்டு வெடிப்புக்கு உள்ளாகியிருந்த பிரதான உணவகப் பகுதி திறக்கப்படாமல் இருந்தது.


இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் குறித்த பகுதி நேற்று மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அதன்படி, புதிய தோற்றத்துடன் கூடிய இந்த புதிய நட்சத்திர வகுப்பு உணவகம் நாளை முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.