Header Ads



நாடாளுமன்ற நேரத்தை, தவறாக பயன்படுத்கின்றனர் – எதிர்கட்சியினர் மீது நாமல் பாய்ச்சல்


நாடாளுமன்றத்தின்நேரத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.



நாடாளுமன்ற சபாநாயகர் தனது நேரத்தையும் நாடாளுமன்றத்தின் நேரத்தையும் எதிர்கட்சிகள் வீணாக்குவது குறித்து உறுதியான முடிவினை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பேசப்படவேண்டிய விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக சேர்க்கசிற்காக எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தை பயன்படுத்த முயல்கின்றனர்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.