Header Ads



சுதந்திரக் கட்சி மறு சீரமைக்கப்படும் - மைத்திரிபால அறிவிப்பு


(செ.தேன்மொழி)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பு தெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியதாவது,

இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புடன் பொதுத் தேர்தலின் பின்னர் இன்றுதான் அவர்களை சந்திக்க முடிந்தது. இதன்போது எதிர்வரும் தேர்தல்களின் போது எமது கட்சியின் இளைஞர் அணி மற்றும் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தொகையை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இதேவேளை காலம்சென்ற முன்னாள் பிரமர் சிறிமவோ பண்டார நாயக்கவின் நினைவுதின நிகழ்வை எதிர்வரும் 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கமைய மதவழிபாட்டு நிகழ்வுகள் என்பன ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் திகதி தானம் வழங்கும் நிகழ்வும் ஒழுங்கு செய்வது தொடர்பில் கலந்துரையாடினோம்.

கட்சியின் முன்னாள் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்க பண்டார நாயக்கவை கட்சியுடன் இணைத்தே செயற்பட வேண்டும். அவரை இணைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை நிவர்த்தி செய்து கட்சியை முன்னேற்றுவதற்காக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கட்சியின் முன்னாள் அல்லது தற்போதைய உறுப்பினர்கள் யாராவது கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினால் அவர்களும் அந்த வீழ்சி தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும். எங்களை பொறுத்தமட்டில் கட்சி வீழ்ச்சியடைய வில்லை. பின்னடவை சந்தித்துள்ளது. கட்சியை முன்னேற்றுவது தொடர்பிலே தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

3 comments:

  1. MY3 SUTHANTHIRA KATCHIYAI MURUSIRALIPPAAR

    ReplyDelete
  2. Aiyo Sirisena, it is time for you to quit the Party and leave it in the hands others to revamp it. Since you NEVER had to lead the Party in Competitive Politics, you have NO clue about leading the Party to Face Elections and you have Long Past your "Use by" date. So, it is best for you and the Party that you leave gracefully, Unless of course you want to follow Ranil and hang on, come what may.

    ReplyDelete
  3. Mr. Sirisena, has it struck you that for any improvement in the SLFP's fortunes, it is vital that you should vacate the Leadership? After all, you were NOT elected by the Membership and the Leadership was thrust on you on your being elected President of the country in 2015 which prompted your predecessor, Mr. Mahinda Rajapakse to resign. All you have done as Party leader is to take the Party downhill. Please let some other capable person take over the leadership of the Party instead of clinging on like a leach.

    ReplyDelete

Powered by Blogger.