சஜித்தின் உரையை ஹன்சாட்டிலிருந்து, நீக்குமாறு கோரிக்கை
- பா.நிரோஸ் -
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் தெரிவித்திருந்தக் கருத்துகள் நாடாளுமன்ற ஹன்சாடிலிருந்து நீக்கப்பட வேண்டுமென ஆளுங்கட்சியின் பிரதமக்கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எனினும் தனது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க முடியாதெனத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்பிருந்த சபாநாயகர்கள் நாடாளுமன்றத்துக்கு வழங்கியிருந்த முன்னுதாரணங்களைப் பின்பற்ற வேண்டுமென்றே தான் கேட்டுக்கொண்டதாகவும், தனது உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டால், அது ஜனநாயக விரோதச் செயற்பாடெனவும் தெரிவித்தார்.
Post a Comment