Header Ads



குவைத் மன்னரை நான் மிக நேசித்தேன், அவரது நற்செயல்கள் நிலைத்திருக்கும் - இலங்கையர் சார்பில் பிரதமர் இரங்கல்


குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபாவின் இறப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மக்கள் சார்பாக  தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பிரதமர் டுவிட்டர் பதிவில், 


இன்று உலகம் ஒரு அரசியல்வாதியை இழந்ததுள்ளது, இவர் நான் மிகவும் நேசித்த தலைவர், அவரது உயர்நிலை ஷேக் சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, குவைத் மன்னர். இலங்கை  மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குவைத் மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய நற்செயல்கள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தாஜூடீனின் குடும்பம்
    வடித்த கண்ணீர்
    கடலில் போய்
    சேர முன்னரே மீண்டும்
    ஆடு நனைதுன்னு ஓநாய்
    அழுகிறதே...
    ராஜபக்ஷயாக்களின் அரசியல் அசிங்கம்.

    ReplyDelete

Powered by Blogger.