Header Ads



விசாரணைக்கு வருமாறு, ஹக்கீமுக்கு அழைப்பு


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாளை வெளளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அவரை முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷி மாரசிங்க ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் நேற்று முன்னிலையாகிவாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

No comments

Powered by Blogger.