Header Ads



தப்லிக் ஜமாத்தினர் மீது, ஞானசாரர் கடும் விமர்சனம்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெரும்பாலானோர் தப்லிகி சிந்தாந்தவாதிகள் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜாவிட் யூசுப்பின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்தார்.

இதன்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாகத்தின் 50 வீதமானோர் சவூதி வஹாபிசத்தின் கீழ் வரும் தப்லிகி சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் ஒரு தப்லிகி சித்தாந்தவாதி என்று ஞானசாரர் தெரிவித்தார்.

இந்த சித்தாந்தம் காரணமாகவே சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இடைவெளி தோற்றுவித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹலால் தயாரிப்புகளை உட்கொள்வது முஸ்லிம்களின் உரிமை என்பதால் தனக்கு ஹலால் தயாரிப்புகள் தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

எனினும் பல் தூரிகைகள் போன்ற பொருட்களுக்கு கூட ஹலால் சான்றிதழைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையின் எஸ்.எல்.எஸ் முத்திரை இருப்பதால் ஹலால் சான்றிதழ் அவசியமில்லை என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்

7 comments:

  1. Cid army police already inspected in thablliq markaz after easter bomb blast.nothing found.
    May allah give you rightpath

    ReplyDelete
  2. இந்த தேரருக்கு முஸ்லிம்களை பற்றிய அணைத்து விடயங்களாகும் சொல்லிக்கொடுத்த எங்கள் சமூகத்தின் ஆட்களை அல்லாஹ் பார்த்துக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  3. "மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை)  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்."
    (அல்குர்ஆன் : 3:104)

    இதனைவிட வேறு ஏதாவது அவர்கள் செய்கிறார்களா ஞானசாரரே?

    ReplyDelete
  4. Few years ago one of my friend working in KSA had a strange dream in which he saw this priest coming for UMRA.... He suddenly woke and went back to sleep thinking it was nonsense.... To his surprice he had the exact same dream again..! Make dua for his Hidaya... Who knows... Allah gives Hidaya to whoever he wished...

    ReplyDelete
  5. @Unknown: Who knows; Almighty in Islamic history has blessed Hithayath especially those who oppressed Islam. Many incidents that took place in the past are examples of this.

    ReplyDelete
  6. @Unknown: Who knows; Almighty in Islamic history has blessed Hithayath especially those who oppressed Islam. Many incidents that took place in the past are examples of this.

    ReplyDelete
  7. Please don't Publish This Terror and Racist Monks any news. Ignore this culprit Monk.

    ReplyDelete

Powered by Blogger.