கரைவலை தோனிகளுக்கு அதிகளவான நெத்தலி மீன்கள் பிடிப்பு - மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கல்முனை கடற்பகுதிகளில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் தோனிகளுக்கு அதிகளவான நெத்தலி வகை மீன்கள் இன்றைய தினம்(02) பிடிக்கப்பட்டன இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வகை மீன்கள் உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையாகியதுடன் மேலும் கரை வலை தோணிகளுக்கு கடந்த நாட்களில் மீன்பிடியானது மிகவும் குறைவடைந்த அளவில் பிடிக்கப்பட்டதனால் கரைவலை மீன்களின் விலையானது வழமையை விட சற்று கூடுதலாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment