Header Ads



அண்ணன் மைத்திரி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடந்ததோ வெட்கத்திற்குரியவை


மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்ததாகவும், அவருடன் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களால் அது முடியாமல் போனது எனவும் நடந்த விடயங்கள் வெட்கத்திற்குரியவை எனவும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.


சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.


அண்ணன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானதும், நாட்டுக்கு ஏதாவது நல்ல வேலைத்திட்டங்களை செய்வார் என நான் நினைத்தேன். அப்படி செய்ய வேண்டும் என்ற தேவை இருந்தது. ஆனால் வெட்கம். அண்ணன் குறித்து அல்ல நம்பிக்கை வைத்த மக்கள் குறித்து வெட்கம்.


அண்ணன் நாட்டில் ஜனாதிபதியாக தெரிவாக ஐக்கிய தேசியக் கட்சியினரே பிரதானமாக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்த தலைவர்கள் செய்த தவறுகள் காரணமாக அந்த கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் நாட்டில் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுதான் நிலைமை எனவும் டட்லி சிறிசேன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.