Header Ads



எந்நேரத்திலும் தலைமை பதவியைவிட்டு விலகிச்செல்ல தயார் - ரணில் அறிவிப்பு


எந்த நேரத்திலும் தலைமை பதவியை விட்டு விலகிச்செல்ல தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவ போராட்டங்களால் கட்சி இனி பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்த செயற்குழுவின் ஒரு சில உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் விதமாக விக்ரமசிங்க இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்சியை ஒரு புதிய தலைவரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் இந்த மறுசீரமைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அடுத்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

அத்துடன் அடுத்த ஆண்டுக்குள் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவே தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.