சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் - எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் அவர் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுகப்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தவேளை நாடாளுமன்ற கமராக்கள் அவர்களை காண்பிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை மக்கள் பார்ப்பதை அரசாங்கம் விரும்பவி;ல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது நாடாளுமன்றத்தை அரசியல்மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment