நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி, பொதுஜன பெரமுனவை வலுவான சக்தியாக்க திட்டம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலு வான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ பெரும் பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம் பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரி வித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது.
பசில் ராஜபக்ஷ பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார்.
நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களின் கட்சியாக மாற்றுவது கட்சியின் இலக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிவதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பலமற்ற எதிர்க்கட்சியுள்ள நாட்டின் ஜனநாயகம்; மக்களின் வாழ்க்கை வசதிகளைக் குறைத்து அதிகாரமுள்ளவரகளின் பொருளாதாரத்தை மேம்படையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதனையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
ReplyDelete