Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரி 78, 79 மாணவர்களின் ஒன்றுகூடல்


யாழ்ப்பாணத்தில் 1978, 1979  காலப்பகுதியில் பிறந்து, ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களின், முதலாவது ஆரம்பக்கட்ட ஒன்றுகூடல், இன்று ஞாயிற்றுக்கிழமை, 20 ஆம் திகதி புத்தளத்தில் நடைபெற்றது.


சகோதரத்துவத்தையும், நட்பையும் அதிகரிக்கும் பிரதான நோக்குடன் நடாத்தப்பட்ட இந்த ஒன்றுகூடலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழும் யாழ் ஒஸ்மானியா கல்லூரி 78, 79 பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர்.


எதிர்வரும் காலங்களில் 1978 1979 இல் கல்வி கற்ற ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு, பயணிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


மேலும் 78, 79 பிரிவு நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட, ரீ சேர்ட்டும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.


அத்துடன் தமது பிரிவுகளில் கல்வி பயின்ற, நண்பர்களின் அத்தியாவசியத் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றுவதற்காக  உருவாக்கப்பட்ட, சதகா குரூப் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.