Header Ads



முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு


- Sulthan Jaseel -


அரசின் வாக்குறுதியின் கீழ் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 60,000 படித்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் வைபவம் நாடு பூராவும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் (02/09/2020) புதன்கிழமை முந்தல் பிரதேச சபையிலும் நமது பகுதிகளைச்சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நியமனங்களை கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் இராஜாங்க அமைச்சர் #சனத்_நிஷாந்த , முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும், புத்தளம் தொகுதி பொதுஜன பெரமுன இனை அமைப்பாளரும், கற்பிட்டி, முந்தல் அபிவிருத்திக்குழுவின் பிரதித்தலைவருமான அல்ஹாஜ் #AHM_ரியாஸ் மற்றும் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபைத்தலைவர் அவர்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



No comments

Powered by Blogger.