31 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் வைத்திருந்த மாநகரசபை ஊழியர் உட்பட மூவர் கைது
போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக கூறப்படும் 31 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளை வைத்திருந்த மூன்று பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் தொழில் ஊழியர், வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகர் உட்பட மூன்று பேரையே மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் மாநகர சபையின் தொழில் ஊழியரின் வங்கிக் கணக்கில் 18 கோடி ரூபாயும், வர்த்தகரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபாயும் மற்றைய நபரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Post a Comment