யுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி
கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பதை 15 சாரதிகள் வீடியோ எடுத்துள்ளனர்.
குறித்த சாரதிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி இந்த இளம் பெண் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தக் கொண்டுள்ளார். இதன் போது 300 பேர் வரையில் அவ்விடதில் கூடி இளம் பெண் உயிரிழப்பதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.
பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த சாரதிகள் வாகனத்தை பாலத்தில் நிறுத்தி விட்டு வீடியோ எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்ன செய்வது! புத்தபெருமானினது வாழ்க்கை வழிமுறையினைப் பினபற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பெரிதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்த மண்ணில்த்தான் இப்படியான கோர நெஞ்ஞினை உடையவரகளும வாழ்ந்து கொண்டிருக்கினறனர்.
ReplyDeleteஅதை செய்தியாக இருக்கும் அதே நேரத்தில், இந்த பெண் தற்கொலை செய்வதை தடுக்க ஒருவரும் முயட்சி செய்யவில்லையா என்று எண்ணத்தோன்றுகிறது.
ReplyDeleteமூழ்கியது மனித அபிமானம்
ReplyDeleteமுந்நூறு சாட்சிகள் முன்னால்!