Header Ads



மதில் விழுந்து 2 வயது சிறுமி வபாத்


திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகர் பகுதியில் மதில் விழுந்த நிலையில் சிறுமி பலியாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று  மாலை இடம் பெற்றுள்ளது.இவ்வாறு பரிதாபகமாக உயிரிழந்த சிறுமி முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரை சேர்ந்த என்.முஷ்ரிபா வயது (02) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உடைந்த மதில் அருகாமையில் சென்று விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மதில் சிறுமி மீது இடிந்து விழுந்துள்ளதால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

குறித்த உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.