Header Ads



சு.க. சார்பில் 14 பேர் நாடாளுமன்றம் சென்றமை, கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - மைத்திரிபால


கடந்த பொதுத் தேர்தலின் போது சிறி லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் 14 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என  அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இந்த கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த விழாவை முன்னிட்டு பெல்லன்வில் ரஜமகா விகாரையில் மத வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.


இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. நாசமாப் போச்சு! மிகப்பெரிய வெற்றியாம் . கட்சியைச் சீரழித்த சாம்பிராணி!

    ReplyDelete
  2. ஆம். உண்மையிலேயே மாபெரும் வெற்றிதான்.

    ReplyDelete

Powered by Blogger.