Header Ads



பொதுஜன பெரமுன அரசாங்கத்தை 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - UNP யின் சிரேஷ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


பலருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி, பொதுஜன பெரமுன மேற்கொண்டு வரும் சேவையும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவும் நாட்டு மக்கள் தெளிவாக இருக்கின்றனர். இதனால், அரசாங்கத்தை பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது.


நல்லாட்சி அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தேடி அறிந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது இந்த நிலைமை எற்பட்டிருக்காது. நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை கூட வழங்க தவறியது.


தற்போதைய அரசாங்கம் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று செய்த தவறுகளுக்கு தற்போது இழப்பீட்டை செலுத்தி வருகிறது எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.