Header Ads



கருவுக்கு UNP உறுப்புரிமை உள்ளதாம், கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு தடையேதும் இல்லையாம்


முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய ஐக்கியதேசிய கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு தடையேதுமில்லை என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் யாப்பினை அடிப்படையிலும் கட்சியின் அவசரதேவையை கருத்தில் கொள்ளும்போதும் கருஜெயசூரிய தலைமை தாங்குவதற்கான தடைகள் ஏதுமில்லை என சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகரின் சுயாதீன தன்மையையும் அரசமைப்பு பேரவையின்தலைவர் என்ற அடிப்படையிலும் எந்த கட்;சியிலும் பதவி வகிப்பதில்லை என கருஜெயசூரிய தீர்மானித்திருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினருக்கான கட்டமைப்பை அறியாதவிதத்தில் அவர் ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் இல்லை என ஆதாரமற்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது எனவும் அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் தொடர்ந்தும் கட்சியின் உறுப்புரிமையை கொண்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.