Header Ads



UNP யும், SJB யும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள்- ருவான்


ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


அடுத்த சில மாதங்களில் ஐக்கியதேசிய கட்சியின் புதிய இளம் தலைவர் உருவாகுவார் எனவும் தெரிவித்துள்ள அவர், அதுவரை ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்து பொறுமையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தனது தலைiமை பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயக்கம் கொண்டிருக்கவில்லை, அவர் தான் இளம் தலைவரிடம் தலைமைப்பொறுப்பை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என ஏற்கனவே தெரிவித்துள்ளார் எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. முடிவிலாத்தொடர்கதையிது!  விட்டுக் கொடுக்கவே வேண்டும், ஆனால், இழக்கத் தயாரில்லை. அப்படியான பதவியை வைத்திருக்கும் வேதனைக்கோர் இமாலய உதாரணம் 'ரணில் விக்கிரம்சிங்க'.  பலஹீனர்கள் ஏற்கக் கூடாததும், திணித்தால் அன்றி தாமாக விரும்பக் கூடாததுமே பதவி!

    ReplyDelete

Powered by Blogger.