ஞானசாரர் அல்ல, நானே தேசியப்பட்டியல் Mp - வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் அறிவிப்பு
கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
அதில் தாமே தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கடிதம் செல்லுபடியற்றது என்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்ல பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையே கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவர் உட்பட்ட குழுவினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாமே தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் ஆணையகத்துக்கு கடிதம் கையளித்த கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரரை தற்போது காணவில்லை என்று அந்தக்கட்சியின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் செயலாளரான தேரர் சர்வதேச அல்லது மதத்தீவிரவாத அல்லது அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் தலையீட்டுடன் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் தமது கட்சி ஏற்பட்டுள்ளதாக பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment