Header Ads



சகல பல்கலைக்கழகங்களும், நாளை திறக்கப்படுகிறது


நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் பரீட்சை திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களின் 4 ஆம் ஆண்டு மாணவர்களின் படை்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து ஜூன் 15 முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முடிவு செய்தது. 

மீண்டும் திறக்கும் பணியின் கீழ், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பாடசலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுமார் 3 மாத காலங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன.

மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இணையத்தளங்கள் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இந் நிலையில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் வைத்திய பீடம் உள்ளிட்ட ஏனைய பீடங்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் கூறினார்.

சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

விடுதிகளில் முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு மாணவருக்கு ஒரு அறை மாத்திரம் என்ற முறை தற்பொழுது கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்திருப்பதனால் மாணவர்கள் வழமை போன்று விடுதிகளில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.