Header Ads



ஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி



ஐக்கிய தேசிய கட்சியை முன்னாள் சபாநாயகர் கரு ஜய சூரிய ஐக்கிய மக்கள் சக்திக்கு விற்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு விடுக்கும் அழைப்பிலிருந்து இது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.


ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் 17 அமைச்சர்களுடன் அப்போதைய அரசாங்கத்தில் ஒன்றா சேர்ந்து இருந்தா் என்று அத்தகைய நபர் இன்று கட்சியின் முன்னேற்றம் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை சட்டப்பூர்வமா கக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சத்திக்கு முடியாது என்ப தால் சதித்திட்டங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றச் செயலாற்றிவருவதாக அவர் தெரிவித்தார்.


அத்துடன் எக்காரணம் கொண்டும் ஐக்கிய தேசிய கட் சியை அழிக்கச் சதிகாரர்களுக்கு இடம்கொடுக்கமாட் டோம் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.