Header Ads



அரசியல் வரலாற்றில் புதிய, சாதனையை படைத்த சஜித்



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக அவர் நாடு முழுவதும் 15 ஆயிரத்து 133 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்துள்ளார்.

5 வாரம் என்ற குறுகிய காலத்திலேயே சஜித் பிரேமதாச இந்த கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுவதுடன் இது நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனை எனக் கூறப்படுகிறது.

அரசியல்வாதி என்ற வகையில் தனது கடமை சம்பந்தமாக தனது அர்ப்பணிப்பையும் அதனை செயற்படுத்துவதற்கு தேவையான பலம் தன்னிடம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரசாரம் ஊடாக ஒப்புவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நாடினால் வெற்றி நிச்சயம் உள்ளங்களை அறிந்தவன் அவன்....

    ReplyDelete

Powered by Blogger.