Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு


கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு இடையில் விமான சேவைகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.


இத்தாலியின்- மிலன், பிரித்தானியாவின் - லண்டன், ஜப்பானின் - டோக்கியோ, மாலைத்தீவின் - மாலி, ஜேர்மனியின்- பிராங்பேர்ட், பிரான்ஸின்- பாரிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின்-சிட்னி ஆகிய நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த இடங்களுக்கும் அதற்கு அப்பாலும் விமான நிறுவனத்துடன் பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி மற்றும் கண்டியில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் டிக்கெட் அலுவலகத்திலிருந்து அல்லது பயண முகவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு 1979 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அல்லது www.srilankan.com இணைய பக்கத்தை பார்வையிடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.