Header Ads



விக்னேஸ்வரன் உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும், இல்லையேல் ஓடஓட விரட்டியடிப்போம் - வீரவன்ச


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேவேளை, முதல் மதம் பௌத்தம். மற்ற இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவையாகும்.

இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம் ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்.

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால், அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் எந்தப் பயனும் அவர்களுக்குக் கிடைக்காது.

முதலமைச்சராகப் பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன், இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. காலையில் களவெடுப்பிலும், மாலையில் மதுவிலும் வாழும் இந்த மங்காத மடையனுக்கு என்ன தெரியும் என்ன விளங்கும்!

    உலகில் மிக பழமகயான மொழி தமிழ் என்று இவனுக்கு எவ்வாறு விளங்கபடுத்துவது காரணம் அவனுக்கு சுமார் 14 மில்லியன் மக்கள் உலகில் கதைக்கும் சிங்கள மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது

    அதனால் அவனுக்கு பொது அறிவுகள் படிக்ககூடிய வாய்புகள் இல்லை!

    ReplyDelete
  2. உங்களபை் போன்றவர்களால் சிறுபான்மை மக்கள் இவர் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்புகின்றனர். அடித்துக்கொண்டே இருங்கள் நாடு அழிந்து போகட்டும்.

    ReplyDelete
  3. What sort of a Cabinet Minister is a person who Vows to use Violence against an MP elected by the people ONLY because that MP made a statement in the Parliament about how ancient his Language is? In fact, Stern Action Needs to be taken Against this Cabinet Minister for Promoting violence against an MP for expressing his opinion on the Floor of the House. Such Cabinet Ministers are a Danger and Threat to Parliament and Democracy. To Start with, this Cabinet Minister should be STRIPPED of his Portfolio forthwith to serve as a lesson for others.

    ReplyDelete
  4. @Muhandiram: You know Muhandiram! If someone wants to declare himself as racist or rowdy or both, there are some elements to follow. The so called Minister, you know he is basically a JVP fellow. I think, you might have born after 1970. You might not know how these JVP tried to damage our country, Sri Lanka. No one can change someone's birth attitude even if he gets very high post. Hon. Speaker already said what the justice Vigneswaran told is his personal view. Right or wrong, no one needs to worry, and it's not an issue also.

    ReplyDelete

Powered by Blogger.