Header Ads



ஆயுதங்களை கடத்த போதைப்பொருள், கடத்தல்காரர்களுக்கு உதவிய பத்திரிகையாளர் கைது


குற்றவாளிகள் ஆயுதங்களை கடத்துவதற்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் பத்திரிகையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

30வயது பத்திரிகையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டையை தவறாக பயன்படுத்திய பத்திரிகையாளர் கொரோனா வைரஸ் வேளையில் சட்டவிரோத ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு உதவினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் விசாரணைகளின்போது பத்திரிகையாளர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட் பத்திரிகையாளரை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவேளை கொரோனா வைரஸ்வேளையில் குற்றவாளிகளுக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்துவதற்கு பயன்படுத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.