Header Ads



பாராளுமன்றம் செல்ல ரதன தேரர் சதி, இரவில் இரகசிய சந்திப்பு - அவரது கேலிக்கூத்தை நிறுத்த கோரிக்கை


பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞான சார தேரரை ஏமாற்றி விட்டு எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டி யல் ஊடாக பாராளுமன்ற செல்ல அத்துரலியே ரதன ஒரு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக சிங்கள தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

ரதன தேரர் , எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலுடன் இரவு நேரத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரதீப் சஞ்ஜீவ தெரிவித் தார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக ரதன தேரரை எவ் வாறு பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்பது குறித்த கலந்துரையா டல் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரதன தேரரிடம் இந்த அரசியல் கேலிக்கூத்தை உடனடியாக நிறுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய அமைப்பா ளர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.