Header Ads



பல்டி அடிக்க மாட்டேன் என, இரத்தத்தில் எழுதி அறிவித்துள்ளேன் - ராஜித

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த தான் பங்களிப்பு செய்ய போவதாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலும் பல்வேறு பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து தமது கட்சியினரை அதைரியப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தலில் தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை எனக் கூறி ஊடக பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்த போதிலும், தான் 77 ஆயிரத்து 476 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டதாக ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணம் நெருங்கும் நேரத்தில் கூட போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த தான் எவ்வித தீர்மானத்தை எடுக்கவில்லை என்பதை நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களுக்கு இரத்தத்தில் எழுதி அறிவித்துள்ளதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.