Header Ads



சிறிகொத்தவில் இன்று மதியபோசனம் - மாகாண தேர்தலின் பின் விலகுவேன் என்கிறார் ரணில்


கட்சியின் முக்கிய பங்கு வகிக்கும் நபர் மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மதியபோசன விருந்துபசார நிகழ்வின் போதே கட்சியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்த கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து வேட்பாளர்களுடம் இன்று கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

5 comments:

  1. Ranil unp gone to grave yard.

    No meaning for meeting.

    Wasting time only.ranil can stay life time leader.jayawewa

    ReplyDelete
  2. மாகாண தேர்தலின் பின்...எப்போது?
    காலன் என்று வருவாரோ, அப்போது!

    ReplyDelete
  3. He never step down from party leader until die.

    ReplyDelete
  4. No! no! He waits until chase out the remaining supporters who voted in the last general election. wait and see he will have been clunged until make the party zero as he had been...

    ReplyDelete
  5. இனி விலகுறதுக்கு யார் இருக்காங்க???
    நீயே தலைவன் நீயே தொண்டன்
    நீயே கட்சி
    ஒன்றில் ஆள்வாய்
    அல்லது மாய்வாய்

    ReplyDelete

Powered by Blogger.