Header Ads



மத்தள விமான நிலையத்தினூடாக உள்ளூர் மரக்கறிகள், பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு திட்டம்


மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக உள்ளூர் மரக்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி உள்ளூர் மரக்கறி மற்றும் பழங்கள் அடங்கிய முதல் விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமான் மஸ்கட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய பொதுமுகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயிரிடப்பட்ட 3,371 கிலோ மரக்கறிகள் மற்றும் பழங்களை சலாம் ஏயர்வேஸின் ஓ.வி - 1432 என்ற விமானத்தின் மூலம் மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த விமானமானது நேற்றைய தினம் 150 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.