Header Ads



ஞானசாரரும், ரதன தேரரும் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கின்றனர் - விமலதிஸ்ஸ தேரர்


தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி, கலகொட அத்தே ஞானசார தேரரின் தரப்பினர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதனிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் அறிந்தே தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துரலியே ரதன தேரரின் அணியினர் தான் தங்கியிருக்கும் இடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் நடத்தி வருகின்றனர் எனவும் தன்னை கொலை செய்ய போவதாகவும் சிறையில் அடைக்க போவதாகவும் அவர்கள் அவ்வப்போது தொலைபேசியில் கூறுவதாகவும் விமலதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை காரணமாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவிக்க வேண்டிய காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது.

No comments

Powered by Blogger.