Header Ads



தம்முடன் இணையுமாறு, கருவுக்கு சஜித் அழைப்பு



முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கருஜெயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்துக்கொண்டு மௌனமாகயிருப்பதை விட அவர் ஐக்கியதேசிய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவேண்டும் என சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஐக்கியதேசிய கட்சியிலேயே கருஜெயசூரிய தொடர்ந்தும் இருப்பது அர்த்தமுள்ள நடவடிக்கையா என தான் கேள்வி எழுப்ப விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கருஜெயசூரிய தனது மக்கள் சேவையை தொடர்வதே அவருக்குள்ள ஒரே சாத்தியமான மாற்று வழி என சஜித் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.