Header Ads



எனக்கு அறிவிக்காமல் செய்யவேண்டாம் - ஜனாதிபதி


இந்த முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அரசு நிறுவனங்களின் தலைவர் பதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்துப் பல அரச முக்கியஸ்தர்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


எவ்வாறாயினும், எந்தவொரு அரச நிறுவனத்தின் தலைவர் அல்லது நிர்வாக குழுவினரை நீக்குதல் , இடமாற்றம் செய்தல் போன்றவற்றை தனக்கு அறிவிக்காமல் செய்யவேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.