Header Ads



புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு


புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு, ஶ்ரீ ஜயவர்தனபுர  பாராளுமன்றத்தின் கூட்ட மண்டபத்தில் கூடுமாறு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இம்முறை பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ள 09ஆவது பாராளுமன்ற ஆரம்பக் கூட்டத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பான அறிவித்தல் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.