Header Ads



றிசாத்தும், சாலியும் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் நானும், விமலும் இடம்பெற மாட்டோம்


அடிப்படைவாதிகளின் உதவியின்றி அரசாங்கத்தை அமைத்த தாம் உட்பட தமது தரப்பினர், எதிர்காலத்திலும் அரசாங்கம் அடிப்படைவாதிகளின் உதவியை பெற இடமளிக்க போவதில்லை என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அசாத் சாலி,றிசார்ட் பதியூதின் போன்றோர் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை எனவும் தான் ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அவர்களின் ஆதரவை பெற இடமளிக்க போவதில்லை என இதற்கு முன்னரும் கூறியதாகவும் அதனை அவ்வாறே செய்ததாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தான், விமல் வீரவங்ச உள்ளிட்டோர் இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர மிகவும் பாடுபட்டதாகவும் அரசாங்கத்தை உருவாக்க வழங்கிய பங்களிப்பை அரசாங்கத்தை நல்லவழிப்படுத்துவதற்கும் வழங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த புன்னாக்கு சொல்வதெல்லாம் நீங்கள் பிரசுரிக்கிறது சரியா

    ReplyDelete

Powered by Blogger.