Header Ads



பாராளுமன்ற ஆசனத்திற்காக சில, பிக்குமார் சண்டையிடுகின்றனர் - பிரதமர்


நாடாளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்வதற்காக சில பிக்குமார் சண்டையிடும் போது படித்த, புத்திசாலியான பௌத்த பிக்கு தலைமுறையை உருவாக்குவதற்காக அமரபுர பௌத்த பீடம் வழங்கி வரும் பாரிய பங்களிப்பு மகிழ்ச்சிக்குரிய விடயம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு - வெள்ளவத்தையில் அமரபுர பௌத்த பீடத்தின் சங்க சபை அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கண்டி அரச காலத்தில் பௌத்த துறவிகளாக துறவறம் பூணுவது சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து சாதியினரும் துறவறம் பூணும் வகையில் அமரபுர பௌத்த பீடம் உருவாக்கப்பட்டது.

படித்த, புத்திசாலி பிக்கு தலைமுறை உருவாக அமரபுர பௌத்த பீடம் வழிவகுத்தது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.