Header Ads



அமைச்சர்களுக்கான அதிகாரங்களுடன், இந்தியாவிற்கான புதிய தூதுவராக மிலிந்த


இந்தியாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்தமொராகொட நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய பிரதமருடன் நெருக்கமான உறவினை பேணுவதற்காக மிலிந்தமொரகொடயை இந்திய தூதுவரக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனவும் அவருக்கு அமைச்சர் ஒருவருக்கு உரிய அதிகாரங்களை வழங்கவுள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமைச்சர் ஒருவருக்கான அதிகாரங்களுடன் இலங்கை தூதுவர் ஒருவரை நியமிப்பது இதுவே முதல்தடவையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


மிலிந்த மொராகொட பல முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளதுடன் மகிந்த ராஜபக்சவிற்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

1 comment:

  1. ஜனாதிபதி எடுத்த முடிவுகளில் மகவும் சிறந்த ஒரு தெரிவு இது. தூதுவர் மிலிந்த மொரகொட அவர்கள் இலஙகைகும் இந்தியாவுக்கும் சிறந்த ஒரு பாலத்தை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமானவர். அவர் தன்னுடைய கடமையைச் சரிவர நிறைவேற்ற அல்லாஹ் அருள்புரிய வேண்டுமென வாழ்த்துகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.