Header Ads



திருகோணமலை இராணுவ கட்டளை தளபதியை, பாராட்டி கௌரவித்த மூதூர் முஸ்லிம்கள்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

புதிதாக கடமையேற்றுள்ள  திருகோணமலை மாவட்ட  இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சீ.டி.வீரசூரிய  அவர்களுக்கு மூதூர் மஜ்லிஷூஸ் ஷூறாவின் தலைமையிலும், ஏற்பாட்டிலும் மூதூர் சிவில் சமூக பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வு நேற்று( 12.) பி.ப.4.30 மணியளவில் நத்துவத்துல் உலமா அரபிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஷூறாசபையின் தலைவர் அல்-ஹாஜ். எம்.எம்.கரீம் மெளலவி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இராணுவ  சிவில் விவகார இணைப்பாளர் கேனல்.சுபசிங்க, 223, படைப்பிரிவு பிரிகேடியர் சாந்த பெரேரா அவர்களும் கலந்து கொண்டனர். 

ஜம்மியத்துல் உலமா-மூதூர் கிளை, மூதூர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், மூதூர் கதீப்மார் சம்மேளனம்,  மூதூர் வர்த்தக சங்கம்,மூதூர் ஜூவல்ரி சங்கம்,  மூதூர் மீனவ சமாஜம், மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம், மூதூர் கிரிக்கெட் சபை உட்பட இன்னும் பல அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

இதன் போது உரையாற்றிய மாவட்ட இராணுவ கட்டளை தளபதி

 நாட்டின் முன்னேற்றம் கருதி இன, மத பேதமின்றி தான் பணியாற்றி வருபவர் என்றும் இத்தகைய பங்களிப்பு மூதூர் முஸ்லிம்களிடம் இருந்தும் கடந்த காலங்களை போல் கிடைக்கும் என்று பூரண நம்பிக்கை உண்டு என்றும் தெரிவித்தார். 

முன்னைய இராணுவ அதிகாரிகளுடன் சமூக ஒற்றுமை தொடர்பில் மூதூர் சமூகம் ஒத்துழைத்து செயற்பட்டதை வெகுவாக பாராட்டினர்.

No comments

Powered by Blogger.