Header Ads



சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று

வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த பெண் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கபிலா மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் டுபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வவுனியா, தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர்,தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கபிலா மல்லவராச்சி மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.