Header Ads



அமைச்சராகுவதற்கு ஞானசாரர் திட்டமிட்டாரா..? நாட்டை பாதுகாக்க ஒளிந்திருக்கிறேன - விமலதிஸ்ஸ தேரர்


துட்டுகேமுனு மற்றும் வலகம்ப மன்னர்களைப் போல பதவியையும், நாட்டையும் தேசத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஒளிந்து கொண்டிருக்கிறேன் என கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் தாமே தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக் குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தமைக்கு காரணம் ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரருக்கு இடையிலான மோதலைத் தடுப்பதற்காக எங்கள் சக்தி மக்கள் கட்சி யின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

தன்னுடைய அமைச்சர் பதவியை தற்போது பொறுப் பேற்று நீண்ட நாட்களுக்கு அமைச்சர் பதவியில் இருக் காமல் ஞானசார தேரர் அல்லது ரத்தன தேரருக்கு எதிர்காலத்தில் வழங்ககுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில், அமைச்சர் பதவியை வேறு கட்சிக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளும் சதித்திட்டத்தைத் தோற்கடிக்கத் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

வலகம்பா , துட்டுகேமுனு போன்ற மன்னர்களைப் போல நாட்டையும், தேசத்தையும் பாதுகாக்க இந்த நேரத்தில் தான் ஒளிந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.