Header Ads



சுனாமி கைது செய்யப்பட்டான்

இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற நிலையில் தலைமறைவாகியுள்ள, பாதாளக் உலகக் கோஷ்டி உறுப்பினரான அங்கொட லொக்கா எனப்படும் லசந்த சமிந்த பெரேராவின் அடியாள் ஒருவர், மேல் மாகாணத்தின் தெற்குக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா - களனி மாவத்தையில், சட்டவிரோதமாக மணல் துறைமுகத்தை நடத்திச் சென்ற, பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான “சுனாமி” என்றழைக்கப்படும்  ரங்கன என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

“சுனாமி” என்பவரைக் கைது செய்தபோது, இவரிடமிருந்து கைக்குண்டொன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக, மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்ததுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.