அஸ்வர் இருந்திருந்திருந்தால் ஜனாஸாக்களை எவ்வாரேனும் முன்னின்று அதனை தீர்த்து வைத்திருப்பார்
(அஸ்ரப் ஏ சமத்)
மறைந்த முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வரின் 3வது மறைந்த நினைவு இன்று (30.08.2020) பொரளையில் உள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் தலைமையகத்தில் அதன் தலைவா் லுக்மான் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் அஸ்வரின் பாாிய நண்பரான கொழும்பு முன்னாள் மேயா் ஒமா ்காமில் அஸ்வா் பற்றிய நினைவு உரையை நிகழ்த்தினாா். அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்னாள் தலைவா் என்.எம். அமீன் , செயலாளா் அகமட் முனவா், ஆகியோறும் உரைநிகழ்த்தினாா்கள். அஸ்வா் அவா்கள் ஞாபாகாா்த்தமாக பாடசாலையில உயா் தரத்தில் கல்வி கற்கும் மாணவா்களுக்கு புலமைப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சா்களான ஏ.எச்.எம். பவுசி, இ்ம்தியாஸ் பாக்கீா் மாக்காா் உட்பட அவரின் நண்பா்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் அங்கத்தவா்களும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய என்.எம். அமீன் -
இன்றைய காலகட்டத்தில் . காலம் சென்ற ஏ.எச்.எம். அஸ்வா்கள் இருந்திருந்திருந்தால் முஸ்லிம்களது சமய ஜனாஸாப் பிரச்சினைகளை எவ்வாரேனும் முன்னின்று அதனை தீா்த்து வைத்திருப்பாா். தற்போது தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பிணா்கள் அஸ்வா்களது பாராளுமன்ற உரைகள் அடங்கிய கன்சாா்ட் அறிக்கைகளை பாா்வையிட்டால் அவா்களுக்குத் தெரியவரும் அவர் மும் மொழிகளிலும் ஒவ்வொறு விடயத்தினையும் தெளிவாக உரை நிகழ்த்தியிருப்பாா். எனது கையில் ஒரு கன்சாட் அறிக்கை உள்ளது. அதனை அன்று அவா் எனக்கு அனுப்பி வைத்திருந்தாா். அதில் ”கெசினோ” சம்பந்தமான பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இஸ்லாம் குர் ஆண் வசனங்களை ஆதராமாகக் வைத்து உரையாற்றியுள்ளாா். சினா செய்வது, மது அருந்துவது போதை, புகைப்பிடித்தல் சுது விளையாடல் சம்பந்தமான சகல தலைப்புகளிலும் குர் ஆன் வசனத்தினைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளாா் .முஸ்லிம்கள் ஒருபோதும் இவ் விடயங்களிலும் சம்பந்தப்பட முடியாது இவைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்டவைகளாகும். என குர் ஆண் வசனங்கள் 119 இ 342. 356 வசனங்கள் தெளிவாக விளக்கம் அளித்து அதனை அரபுடன் உரையாற்றியுடதுன் பாராளுமன்ற கன்சாாட் அறிக்கை பிரிவுக்குச் சென்று அவா் கூறிய குர் ஆன்வசனங்களயும் பதிவிட்டுள்ளாா்.
முன்னாள் மேயா் ஓமா் காமில் இங்கு உரையாற்றுகையில் - ஏ.எச்.எம். அஸ்வா் 1974ல் இருந்து எனது நண்பன். நாங்கள் இருவரும் உலக கிரிக்கட் போட்டி நிகழ்வினை பாா்ப்பதற்காக லண்டன் சென்று கிரிக்கட் ஆட்டத்தினை ரசித்து வருவோம் முன்னாள் ஜனாதிபதிகளான . ஜே.ஆர் ஜெயவா்த்தன ஆர். பிரேமதாஸா, டி.பி.விஜயதுங்க, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி , மகிந்த ராஜபக்ச, காலம் சென்ற சபாநாயகா் பாக்கீா் மாக்காா் ஆகிய தலைவா்களுடன் மிகவும் நெறுக்கமாக பழகிவந்தாா்.
தன்னால் முடியுமான உறவை சகல தலைவா்களுடன் ஏற்படுத்திக் கொள்வாா்கள் அவா்களை வீட்டுப் பிள்ளைகள் போன்று நெறுங்கி பழகி சமுகம், சாா்ந்த விடயங்கள் மதம், கலை கலாச்சார விடயங்களில் பிரச்சினைகள் ஏழும்போது தலைவா்களை அனுகி தீா்வைப் பெற்றுக் கொடுத்துள்ளாா். ஆர்.பிரேமதாசாவுடன அவா் மகிவும் நெறுங்கி பழகினாா். அஸ்வா் அவா்கள் கொழும்பு மத்தியில் பாரிய தேர்தல் பிரச்சாரத்தினை செய்து ஆர்.பிரேமதாசாவுக்கு 1977ல் 35 ஆயிரம் வாக்குகளை பெறுவதற்கு பாடுபட்டாா். ஆர். பிரேமதஸா எம்.பியாக வருவதற்கு காரணமாகவும் இருந்தாா். அத்துடன் ஆர்.பிரேமதாஸாவுடன் மாதத்தில் 21 நாற்கள் அவருடன் நாடு பூராகவும் கெலிக் கெப்டரில் சென்று அவரது உரையை மொழி பெயா்த்துள்ளா். அதன் பிறகு அவா் 4 முறை தேசிய பட்டியல் எம்.பியாகவும். முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சா், பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். தற்போதைய பிரதமா் மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெறுக்கமாக பழகி வந்தாா். மகிந்த ராஜபக்ச அவா்கள் அவருக்கு தேசிய பட்டியல் எம்.பி பதவி வழங்கியதுடன் அமைச்சராக பதவி வகித்தாா். அஸ்வரைத் தேடி அடிக்கடி தேடி எனது வீட்டுக்கு மகிந்த ராஜபக்ச தேடி வருவாா். அதன் பின்னா் அஸ்வா் அவா்கள் மகிந்த ராஜப்கசவின் ஒரு வலது கைபோன்று செயல்பட்டாா். அவா் ஒரு நடமாடும் என்சைக்கலோபியா, சகலவற்றை அறிந்து அவா்கள் பற்றிய கட்டுரைகள் நினைவு முத்திரை வெளியிடல் நுால் எழுதுதல் ஞாபகாா்த கட்டுரை எழுதல் இலக்கிய வாதிகளை கௌவித்தல் போன்ற சகலவற்றிலும் அவரது பங்கு பெரிதும் பாரட்டக் கூடியது. என ஒமா் காமில் தெரிவித்தாா்.
Indeed!
ReplyDelete