Header Ads



மாகாண சபை தேர்தலில், அமோக வெற்றிப் பெறுவோம்

(இராஜதுரை ஹஷான்)

எங்கள் மக்கள் சக்தி கட்சி (அபே  ஜன பல பக்ஷ)  கட்சியின் தேசிய பட்டியலில்   பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.   

இக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒரு ஆசனத்தை பயனுடையதாக  உபயோகிக்க  வேண்டும்  என  கட்சியின்  செயற்குழு தீர்மானித்துள்ளது.

இக்  கட்சி  மொனராகலை,   கொழும்பு,  குருநாகலை   மற்றும் களுத்துறை  ஆகிய  மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில்   போட்டியிட்டு  67,758   வாக்குகளை  பெற்றுக் கொண்டுள்ளது.     பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள   வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனம்  இக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

தேசிய பட்டியலில்   ஞானசார தேரரின்   பெயரை   உள்ளடக்குவதற்கு அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தை     எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர்   தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

எங்கள் மக்கள் சக்தி கட்சி   பல மாவட்டங்களில்  3 அல்லது   4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. எனவே இடம்பெறவுள்ள  மாகாண சபை தேர்தலில்   அமோக வெற்றிப் பெறுவோம் என  அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.