Header Ads



ஏறாவூர் நகர பிரதேச, செயலாளராக நிஹாறா நியமனம்


ஏ.எச்.ஏ. ஹுஸைன் 


ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக நிஹாறா மௌஜுத் நியமிக்கப்பட்டுள்ளார்.


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைந்த இந்த நியமனத்தினடிப்படையில் அவர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் தனது கடமைப் பொறுப்புக்களை வெள்ளிக்கிழமை 21.08.2020 ஏற்றுள்ளார்.


இலங்கை நிருவாக சேவையில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட நிஹாறா மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக 13 வருடங்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளராக 3 வருடங்களும் கடமையாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இவர் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகக் கடமைப் பொறுப்பேற்றுள்ளதை பல பொது அமைப்புக்களும் பொது மக்களும் வரவேற்றுள்ளனர்.

1 comment:

  1. நல்வாழ்த்துக்கள் சகோதரொ நிஹாறா மெளஜுட். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.